வாட்டாகுடி கிராமத்தில் ஒத்தவீடு பட இயக்குநர் பாலு மலர்வண்ணன் அவர்களை பாராட்டி கெளரவித்த போது எடுத்த படம் நாள்:04.09.2011 |
Tuesday, March 25, 2014
OTHTHA VEEDU BEST AWARD
Thursday, March 20, 2014
OTHTHA VEEDU AUDIO LAUNCH STILL
OTHTHA VEEDU AUDIO LAUNCH STILL
OTHTHA VEEDU AUDIO LAUNCH VIDEO
OTHTHA VEEDU MOVIE AUDIO LAUNCH PART 1
OTHTHA VEEDU MOVIE AUDIO LAUNCH PART 2
OTHTHA VEEDU MOVIE AUDIO LAUNCH PART 3
OTHTHA VEEDU MOVIE TRAILAR
https://www.youtube.com/watch?v=mWohFiRrFFE
OTHTHA VEEDU AUDIO LAUNCH NEWS AND STILLS
விஷ்ஷிங் வெல் புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ் குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா, சண்முகம், யோகி தேவராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.இதிரிஸ், எம். சங்கர் இருவரும் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர்.
கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி இசையமைக்க, பாடல்களை தாணு கார்த்திக், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், வாட்டாக்குடி ராஜராஜன், சிங்கப்பூர் சொ.சிவக்குமார், இனியதாசன், விஜய்கிருஷ்ணா, தமிழமுதன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஈஸ்வர்பாபு, ரமேஷ்ரெட்டி இருவரும் நடனம் அமைத்துள்ளனர். கலை இயக்குநராக சி. சண்முகம் பணியாற்றி உள்ளார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்திலும், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்திலும் வசனக் காட்சிகள் படமாகி உள்ளது. தற்போது பின்னணி இசையமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது.
திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்க, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., முன்னிலை வகித்தார். முதல் பாடல் சிடியை இயக்குனர் அமீர் வெளியிட, நடிகர் பிரஷாந்த் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் வி.சேகர், பேரரசு, சுப்பிரமணியம் சிவா, வி.இசட் துரை, பாண்டிராஜ், தொழிலதிபர்கள் ஏ.எஸ். சண்முகம், துரை, பி.ஆர்.ஓ. டைமண்ட் பாபு, விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
முன்னதாக இயக்குநர் பாலு மலர்வண்ணன் வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் தேவ் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கவிதா தொகுத்து வழங்கினார்
More stills
Subscribe to:
Posts (Atom)